பணியை துவக்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் பதவி ஏற்ற டக்ளஸ் தேவானந்தா தனது பணியைத் தொடங்கினார்.
பணியை துவக்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
x
* அமைச்சர் பதவி ஏற்ற டக்ளஸ் தேவானந்தா தனது பணியைத் தொடங்கினார். தன் அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

* மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சகத்தில் தன் பணியை துவங்கி அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

* இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்த் கால தாமதங்களுக்கு முறைகேடுகளுக்கு ஏமாற்றங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் மக்களின் கோரிக்கையை அறிந்து நியாயத்தன்மை உறுதிப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்று நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்  மேலும் உங்களுடைய நடவடிக்கைகளுக்கு எந்தவித தடைகள் இன்றி முன்னோக்கி செல்ல நான் உதவிகரமாக இருப்பேன். 

* அதனால் நீங்கள் எந்நேரமும் என்னுடன் கலந்துரையாடலாம் மேலும் மாற்று கருத்துகள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு என் கருத்துக்களையும் பிரச்சினை தொடர்பாக தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தன் அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் அதிகாரிகளிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்