"சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க திட்டமிட்ட விடுதலைபுலிகள்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டு இருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க திட்டமிட்ட விடுதலைபுலிகள் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
x
* அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு வாழும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

* அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து  நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்ததாகவும் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்தார்.

* விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு பயந்து முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர், ராணுவதளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், இறுதி போரை முடித்து வைத்தது தான், தான் எனவும்  சிறிசேனா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்