பகவதி அம்மன் "கோயிலை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் சேகர்பாபு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பகவதி அம்மன் கோயிலை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சேகர்பாபு
x
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
பக்தர்களின் வேண்டுகோளின்படி தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டு ஆகம விதிகளுக்கு உட்பட்டு திருப்பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். பக்தர்கள் முன்வைக்கும் வேண்டுகோளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதாகவும், நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்