ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியவில்லை - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியவில்லை - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி
x
மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார். 

சென்னையிலிருந்து புறப்பட்ட நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சக நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளர், ஊழியர்கள், வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் நீண்ட தூரம் செல்வதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.   

தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும் அது உயர்நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என்றும் சக நீதிபதிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

தன் மீதான சக நீதிபதிகளின் அளவு கடத்த அன்பினால் பூரித்து போயிருந்ததாகவும் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.  நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள் என அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது போலவே வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும்  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.

தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சஞ்சிவ் பானர்ஜி, இதுநாள் வரையில் ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அதை தன்னால் முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், தனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே அனைவரிடமிருந்தும் விடைபெறுவதாக கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்