"தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" - ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன்

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், இப்போது ட்விட்டரில் பிரதமர், முதலமைச்சரை டேக் செய்துள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அஜித் ரவி என்பவர் தனக்கு பல்வேறு பிரச்சினைகள் தருவதாகவும், அவர் மீது பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் போல தன் மரணத்திற்கு பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்