புகார் அளிக்க வந்தவர்களுக்கு விருந்து-காவல் உதவி ஆய்வாளரின் மனித நேயம்

கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் மற்றும் ஆண்டிப்பாளையம் கிராமங்களை சேர்ந்த 7 பேர் சோழதரம் காவல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்னர்.
x
கடலூர் மாவட்டம் வடக்குபாளையம்  மற்றும் ஆண்டிப்பாளையம் கிராமங்களை சேர்ந்த 7 பேர் சோழதரம் காவல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்னர்,. முழு ஊரடங்கு காரணமாக உணவகங்கள் திறக்காததால் அவர்கள் அனைவரும் பசியோடு காவல் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்,. புகார் அளிக்க வந்தவர்கள் பசியோடு இருப்பதை அறிந்த உதவி ஆய்வாளர் இளையராஜா, அவர்களுக்கு விருந்து படைத்துள்ளார்,. மேஜை மீது தலைவாழை இலையை போட்டு முட்டை மற்றும் மீன் குழம்புடன் உதவி ஆய்வாளர் இளையராஜா சாப்பாடு பரிமாறியுள்ளார்,.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 


Next Story

மேலும் செய்திகள்