"குமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
x
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  சட்டவிதிப்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.  இந்த நிலையில் குமரி தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், வி.வி.பேட் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்