ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
x
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கோரிக்கை விதிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்