மீட்டர் வட்டி கடனை தர முடியாமல் தவிப்பு - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கடன் தொந்தரவால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் பெற்றோர் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
x
திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி - மேனகா தம்பதி, தறி தொழில் மேம்பாட்டுக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். பணம் கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததோடு, சுப்பிரமணி-மேனகாவை தரக் குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனம் உடைந்த தம்பதி, குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றது. இதில் சுப்பிரமணி-மேனகா  இறந்த நிலையில், அவர்களின் பிள்ளைகள் உயிருக்கு போராடினர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதித்தனர். கடன் தொல்லையால், தறி தொழிலாளி தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்