ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
x
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணி ஆணையை வழங்கினார். அதில், ஜெயராஜின் மூத்த மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சிஸ்க்கு, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெர்ஸிஸ், தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உரிய நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்