சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - விசாரணை குழு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா ​தொற்று உறுதியாகி உள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - விசாரணை குழு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
x
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்  இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலீஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை  பென்னிக்ஸ் கடை வைத்திருந்த பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிபிஐ குழுவில் இடம் பெற்றிருந்த இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு நாளுக்கு முன்பாகவே 3 காவலர்களும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தபட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 5
வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதற்கிடையே கொரோனா பாதித்த சிபிஐ அதிகாரிகள் 2 பேரும்  மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்