முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை நடப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் விரைவில் இயல்பு நிலை திரும்ப அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த தகவலை தமிழக அரசு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்