நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
x
நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாநிலத்தின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழக அரசை பொருத்தவரை,  தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகிய மாதங்களில் பள்ளிகளை திறக்கலாமா, இதுகுறித்து பெற்றோர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து கேட்டு வருகின்ற 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்