சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்

சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
x
சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அந்த கடையில், 100 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும்  நிலையில்,  ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய  110 பேருக்கு பரிசோதனை செய்ததில், 50  பேருக்கு தொற்று உறுதியானது.  இதையடுத்து அவர்கள சிகிச்சைக்கு அனுப்பிய அதிகாரிகள், துணிக்கடைக்கு சீல் வைத்தனர். கடைக்கு வந்து சென்றவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.  பூந்தமல்லியில் இதுவரை 410 பேர் பாதிக்கப்பட்டு, 260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்