போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
x
தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக சேலம் டி.ஐ.ஜி.,க்கும், தர்மபுரி எஸ்.பி.,க்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்,.இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உதவி ஆய்வாளர்களுக்கு எதிரான புகாரை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சேலம் டி.ஐ.ஜி.க்கும், தர்மபுரி எஸ்.பிக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்