கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,  செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்த வாகனங்கள் அனைத்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்