மணல் கடத்தல் வழக்கு - முன்ஜாமீன் கோரியவர் 50 ஆயிரம் செலுத்த உத்தரவு`

மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவருக்கு ரூபாய் 50 ஆயிரம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்கு - முன்ஜாமீன் கோரியவர் 50 ஆயிரம் செலுத்த உத்தரவு`
x
மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவருக்கு ரூபாய் 50 ஆயிரம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அர்ஜூனா ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், ​அவர் அளித்த தகவலின்பேரில் வைரமுத்து என்பவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, வைரமுத்து முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் அளித்த நீதிபதி, விருதுநகர் மாவட்ட மினரல் பவுன்டேசனுக்கு ரூபாய் 50 ஆயிரத்தை செலுத்தும்படி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்