காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர் ,. அதில், 20 பெட்டி மதுபானங்கள இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுபான கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், மதுபானம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
Next Story