சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
x
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில், ஏற்கனவே 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பென்னிக்ஸின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், பணியாற்றிய தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறியுள்ளரர். கைது செய்யப்பட்ட காவலர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக இந்த வாரத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.... 




Next Story

மேலும் செய்திகள்