காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு - 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்றது. நெல்லை மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குனர் விஜயகலா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் சில தடயங்கள் காவல்நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story