சாத்தான்குளம் சம்பவம் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் ஆறுதல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஜெயராஜ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஜெயராஜ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக தயாராக இருப்பதாக தெரிவித்தார். இறந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். முன்னதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஜெயராஜ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி தேற்றினார். 


Next Story

மேலும் செய்திகள்