சென்னை ஆவடி அருகே ரூ.8 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை ஆவடி அருகே 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி அருகே ரூ.8 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகைகள் கொள்ளை
x
சென்னை ஆவடி அருகே உள்ள வீராபுரத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து கீழே வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏழு சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்