சென்னை ஆவடி அருகே ரூ.8 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை ஆவடி அருகே 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி அருகே உள்ள வீராபுரத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து கீழே வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏழு சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story