சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் விளக்கம்

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது.
x
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின்னர் முககவசங்களை வழங்கினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ண‌ன், முக‌க்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி செல்லும் நோயாளிகள் , முதியவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்