திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
x
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இன்று காலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற  மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

-

Next Story

மேலும் செய்திகள்