சென்னை திருவொற்றியூரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்

சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத்தவர் 50க்கும் மேற்பட்டோர் ஜார்க்கண்ட் பீகார் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்
x
சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத்தவர் 50க்கும் மேற்பட்டோர் ஜார்க்கண்ட் பீகார் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு  சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களை சிறப்பு ரயில் மூலம் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வலியுறுத்தி கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சுப்பிரமணி என்பவர் தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி சொந்த ஊர் செல்வதற்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்