சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக புறப்பட்டனர்.
சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் - போலீசார் தடுத்து விசாரணை
x
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்வதாக புறப்பட்டனர். அவர்களை  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கம்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, அனைவரும் தற்போது சதுரங்கப்பட்டினம் அருகே தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2 நாட்களில் அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள்  உறுதி அளித்ததையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சமாதானமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்