தேவாலய சுவர் இடிந்து சிறுவன் பலி - 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரத்தில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் பலியானதுடன் 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தேவாலய சுவர் இடிந்து சிறுவன் பலி - 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
x
ராமநாதபுரத்தில் தேவாலய சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் பலியானதுடன், 2பேர் படுகாயம்  அடைந்துள்ளனர்.அங்குள்ள, எம்.எஸ்.கே நகர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது  திடீரென தேவாலயத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில், ஜெப்ரி என்கிற 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் மற்றும் 
பிரிசில்லா என்ற பெண்மணி ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்