அரக்கோணத்தில் காலை 6 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து, கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரக்கோணத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜவுளி நகை கடை பேக்கரி மளிகை கடை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு காலை 6 மணி முதல் 2 மணி வரை கடை திறக்க அனுமதியளிக்கப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story