மகன்களுக்கு கொரோனா - மன உளைச்சலில் முதியவர் மரணம்

சென்னை சேத்துப்பட்டில் இருமகன்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகன்களுக்கு கொரோனா - மன உளைச்சலில் முதியவர் மரணம்
x
சென்னை சேத்துப்பட்டு பிருந்தாவனம் பகுதியில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவரது இரு மகன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இரண்டு மகன்களுக்கும் தொற்று ஏற்பட்டதாலும், அவர் வசித்த பகுதி தடை செய்யப்பட்டதாலும் முதியவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய அவரை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதியதொற்றுக்கு கொரோனா தொற்று காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்