"கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தில் நடத்தப்படும்" - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
x
கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், மார்ச் 17ஆம் தேதியிலிருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து செமஸ்டர் தேர்வுகளும், அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். மேலும் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்