திருவாரூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் - நரிக்குறவர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய போலீசார்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக சென்ற நரிக்குறவர் சமுதாயத்தினரை மறித்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவாரூரில் இருந்து சென்னைக்கு நடைபயணம் - நரிக்குறவர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய போலீசார்
x
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக சென்ற நரிக்குறவர் சமுதாயத்தினரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் திருவாரூரில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக செல்வது தெரியவந்தது. உணவின்றி களைப்புடன் காணப்பட்ட அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் குடிநீர் வழங்கிய போலீசார், அவ்வழியாக சென்ற லாரி மூலம் அவர்களை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்