ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு
ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கி அதில் மாணவர்களுக்கு எழும் பாடரீதியான சந்தேகங்களை தீர்க்க வேண்டும் எனவும், மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை மாணவர்களுக்கு அனுப்பிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story