"வீட்டு வாடகையில் ஒரு மாதம் விலக்கு அளிக்க வேண்டும்" - வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டு வாடகையில் ஒரு மாதம் விலக்கு அளிக்க வேண்டும் - வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
x
கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிவிப்பில், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் வாடகை செலுத்த முடியாத நிலையில், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.  தினசரி கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள்  தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்