ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்கள் - தோப்புக்கரணம் போட வைத்து அனுப்பிய போலீஸார்
ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை பகுதியில் போலீஸார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என அறிவுறுத்தி வருகின்றனர்.
ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை பகுதியில் போலீஸார், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் மீறி இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வருகின்றனர். தேன்கனிகோட்டை பேருந்து நிலைய பகுதியில் சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீஸார், அவர்களை தோப்புக்கரணம் போடவைத்தனர். அதன்பின்னர் போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story