கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000 - ஏப்ரல் 2 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000 - ஏப்ரல் 2 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏப்ரல் மாதத்துக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

* ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருவதை கட்டுப்படுத்த,  தெரு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்றும், யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ரேஷன் கடைகளில்  முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளதுடன், ரொக்கப்பணம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். 

* வாகன வசதி உள்ள ஊர்களில் வீடு வீடாகச் சென்று தொகை வழங்கலாம் என்றும், அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* வரிசையில் நிற்பவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்ய வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நிவாரண உதவிகளை உரிய முறையில் விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியாளர்களை சாரும் என்றும், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் இந்த பணியை மேற்கொள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்