"நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது" - புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என, புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது - புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என, புதுச்சேரி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரச்சாரத்தின் போது,  அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரன்பேடி குறித்து அவதூறாக பேசியதாக,  நாஞ்சில் சம்பத் மீது, தவளக்குப்பம் காவல்நிலையத்தில்  கடந்தாண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்கு கடந்த19 ம் தேதி புதுச்சேரி காவல்துறையினர் சென்றனர்.இதனிடையே புதுச்சேரி காவல் துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி,  நாஞ்சில் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார்,நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்த கூடாது என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்