"வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்கிறது"

சென்னை வண்ணாரப்பேட்டையில், சிஏஏ போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.
வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்கிறது
x
சென்னை வண்ணாரப்பேட்டையில், சிஏஏ போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர். கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி வண்ணாரப்பேட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடர்வதாக கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் சட்டம் இயற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமாத் கூட்டமைப்பினர்  கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்