அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியில் தற்போது கவர்ச்சி பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி
x
பொழுது போக்கு டிக்டாக் செயலியினால் சமுதாயத்தில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அதை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

* இதனையடுத்து டிக் டாக்கில் வீடியோவை வெளியிடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது நீதிமன்றம். இருப்பினும் டிக் டாக் செயலி மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

* இதன் வெளிப்பாடாக டிக்டாக்கில் இலக்கியா என்பவர், தொடர்ந்து கவர்ச்சிகரமான பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு வீடியோவிற்கும், ஆயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும், குவிந்தன. 

* இந்நிலையில், இவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி சிலர் பணம் பறிப்பதாக இலக்கியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். 

* தமது, பெயரில் போலி ஐடிக்கள் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கும் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், யாரும் அதை   நம்பி பணத்தை பறி கொடுக்க வேண்டாம்  எனவும் கேட்டுக்கொண்டார்.

* டிக்டாக்கில், பல்வேறு மோசடிகள் அரங்கேறிய நிலையில், தற்போது கவர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடும் பெண்களின் பெயரை பயன்படுத்தி, ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்