சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்

தமிழகத்தில் சாலை அமைக்க செலவான தொகையை வசூலித்துவிட்ட சுங்கச்சாவடிகளை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்
x
தமிழகத்தில் சாலை அமைக்க செலவான தொகையை வசூலித்துவிட்ட சுங்கச்சாவடிகளை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தங்கவேல் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்று கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த மனுவுடன் இதனையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று மனுவுக்கு  2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்