மீனவர்கள் நடுக்கடலில் மோதல் எதிரொலி: அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதம் - தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், நாகை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
x
வேதாரண்யத்தில் நடுக்கடலில், கீச்சாங்குப்பம்- வெள்ளப்பள்ளம் மீன்வர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்  17 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் உத்தரவிட்டதால், மீன்வளத் துறை இணை இயக்குனர் அமல் சேவியர்,  டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸ் குழு வலைகளை பறிமுதல் செய்ய முயன்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திடீரென மீனவ பெண்கள் கையில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால், துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்