குவைத்திலிருந்து சென்னை வந்தவருக்கு காய்ச்சல், சளி - கொரோனா அறிகுறியா? என மருத்துவ பரிசோதனை

குவைத்தில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த கார் டிரைவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குவைத்திலிருந்து சென்னை வந்தவருக்கு காய்ச்சல், சளி - கொரோனா அறிகுறியா? என மருத்துவ பரிசோதனை
x
குவைத்தில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த கார் டிரைவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாகப்பட்டினம் திட்டச்சேரியை சேர்ந்த அன்வர்தீன் என்பவர் குவைத்திலிருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில், அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது  கொரோனா வைரஸ் அறிகுறியாக  இருக்கலாம் என்பதால் விமான நிலைய மருத்துவ குழுவினர் அன்வர்தீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்