தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் - 3 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வேட்பாளர் வெற்றி

அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணனை தொகுதிக்குள் விடமாட்டோம் என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் - 3 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வேட்பாளர் வெற்றி
x
அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணனை தொகுதிக்குள் விடமாட்டோம் என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 3வது முறையாக, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளர் விஜயலெட்சுமி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வேட்பாளர் ஆசிர்வாதம் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள், தங்கள் வசம் 7 போ் உள்ள நிலையில், 3 உறுப்பினர் கொண்ட அதிமுக வென்றது எப்படி என கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்