"மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்" - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்

மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
x
மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார். மதுரை கூடல் நகரில் உள்ள  சகாய மாதா ஆலய வளாகத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில், இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டி.கே.எஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் அந்தோணி பாப்புசாமி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து அனைவருடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்