"டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்" - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு
x
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில்,  இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்