சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
x
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே போராட்டம் நடைபெறுவதாக, போராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடையில், திருமணம் நடைபெற்றது. ஷயின்ஷா மற்றும் சுமையாவுக்கு, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தினர். பின்னர், மணமக்கள் வீட்டு சார்பில், போராட்டக்காரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்