மணல் கடத்தல் : ரூ.15 ஆயிரம் அபராதம் - அபராதத்தை கூர்நோக்கு இல்லத்திற்கு வழங்க உத்தரவு
மதுரையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ஏழாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாப்பான்குளம் கண்மாயில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ஏழாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு மதுரை கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கழிப்பறை உள்ளிட்ட இடங்களை தூய்மையாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அங்கு தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story