மாற்று திறனாளிகள் வாகனத்தை இயக்கும் திருநங்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கவுரவம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் தற்காலிக பணியை திருநங்கை ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் தற்காலிக பணியை திருநங்கை ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த அபர்னா என்ற திருநங்கையின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அபர்னா, இது போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story