"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள கால்நடைப் பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
சர்வதேச அளவில், ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா சேலத்தில் அமைய உள்ளது. கால்நடை உயர்தொழில்நுட்பங்கள், நாட்டின கால்நடை மற்றும் விலங்கினங்கள் ஆராய்ச்சி, கால்நடை மருத்துவக் கல்லூரியும் இந்த ஒருங்கிணைந்த பூங்காவில் அமைய உள்ளது. இதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். ஆயிரத்து 22 கோடி ரூபாயில் அமைக்கப்படும் இந்த கால்நடைப் பூங்கா, சர்வதேச தரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிமுக எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் திருச்சி, சேலம், திருவண்ணாமலையில் புதிதாக 3 கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமையும் என தெரிவித்தார். மேலும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும் இதற்காக தனிச்சட்டம் கொண்டு வரப்படும் எனவும்  அறிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்