கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை ரூ. 50 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த வழக்கறிஞர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை ஏலம் விடப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை ஏலம் விடப்பட்டது. இதற்காக அலங்கரித்து அழைத்து வரப்பட்ட காளையை 50 ஆயிரம் ரூபாய்க்கு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் குழந்தைவேல் ஏலத்தில் எடுத்தார். இதையடுத்து அவரிடம் காளை ஒப்படைக்கப்பட்டது. இதே போல் 3 கன்றுக்குட்டிகளும் ஏலத்தில் விடப்பட்டது.
Next Story