களைகட்டிய திருத்தணி முருகன் கோயில் தைப்பூச திருவிழா
ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது.
ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது. அதிகாலையில் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Next Story